வழித்துணையாய்...
நடந்தேன்..
வாழ்க்கைத் துணையாய்
மாலையிட்டாய்..
சாயும் தோளில்
பாரம் தந்தேன்..
சுமைதாங்கியாய்
ஏற்றுக் கொண்டாய்..
பஞ்சு இதயத்தில்
பாசம் வைத்தேன்..
நெஞ்சு கனக்கிறதென்று
அழுது சொன்னாய்...
கண்ணாடி இதயங்களில்
கறை இருக்காது..!
நம் அகமும்..புறமும்...
காணக் கிடைத்த
மாயக்கண்ணாடி
உன்னில் நானும்
என்னில் நீயுமாய்..
தெய்வம் தந்த
இதயக்கண்ணாடி...!
------------------------------ --------------
ஜெயஸ்ரீ ஷங்கர்..
சிதம்பரம்
nice one... http://www.rishvan.com
பதிலளிநீக்கு