எழில் வளர் கூடு
என் உயிர் கூடு
காதலைத் தாலாட்டி
காலத்தை நீட்டிடும்..
சொந்தங்களை சீராட்டி..
சிரிக்கும் வானம் பாடியாய்
வளர் கூடு வாழும்...
அன்பு கொண்டு எதிலும்..
முழங்கை நீட்டிடும்...
வாழும் வரை வளரும்..
உயிர் கூடு..வலையில்..
சிக்கிய பறவையாய்...!
என்னுள்ளே..சிறகொடிந்து..
வீழ்ந்தாலும்...சுதந்திரமாய்..
விண் எகிறும் ..கற்பனையில்..
உயிர் பறவையிது..
தங்கும் கூடு....
தாங்கும் கூடும்..!
தங்கக் கூடு...!
ஜெயஸ்ரீ ஷங்கர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக