பிரபலமான இடுகைகள்

செவ்வாய், 13 மார்ச், 2012

வெண் சங்கு..!




நெஞ்சில் கொள்ளை ஆசையாய்..
சிறுக சிறுக நான் சேர்த்த 
பொக்கிஷங்கள் எல்லாமும்..
உணர்வுகள் சுமந்த என் உயிர்..!
மண் படிந்த சிப்பிகள்..
பாசி படிந்த வெண்  சங்குகள்..!
கடல் நுரை பூக்கள்..!
நட்சத்திர மீன்கள்..!
கண் முழிக்கும் சோழிகள்..!
ஹரித்வாரில் அள்ளிய
கூழாங்கற்கள்...!
வண்ணத்துப் பூச்சியின்
ஒற்றை சிறகின் ஓவியம்..
"குட்டிபோடும்" ஆசையில் 
சேர்த்த ஒற்றை  மயிலிறகு..
"மஹா போதிமரத்தின்"
காய்ந்த ஒற்றை இலை...
காக்கா பொன்னு...
கலர் கலரா மண்ணு...
நானிருக்கும் வரை 
என்னோடிருக்குமென
சேர்த்து வைத்த சொர்கங்கள்...
உன்னவளாய்ப் போனபின்பு..
சொர்க்கம் நீஎன்றானபின்பு..
என்னையே  அஸ்தியாய் 
கரைத்துவிட்டேன்....
நீலக் கடலில் 
என் உயிர் கொட்டி...
என்றேனும் ஒருநாளில் 
உன் பாதங்கள் கடலை 
நனைக்கும் வேளை....
பாதத்தில் சிக்குமோ...?
வெண் சங்கு..!
========================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக