பிரபலமான இடுகைகள்

செவ்வாய், 13 மார்ச், 2012

கலங்கரைவிளக்கம்..



நீலக் கடல் அலையில்...
கம்பீரமாய்...தவழ்ந்து  வரும் கப்பல்....
பவனி வர..அதனருகில் 
துவண்டு எழும் 
கட்டுமரம்..துணை வர...
இரண்டும் சேரத் 
துடித்ததென்னவோ....
கரை...ஒன்றில் தான்..
பெருங்கடலில்...பெரும்புயலாய்....
காற்று..சுழன்றடிக்கும் நேரத்தில்..
கப்பல் மட்டும்
செல்லும் வழி தவறி 
திசை மாறிப் போனதம்மா..
கலந்கரையும் கப்பலைக் 
காப்பாற்ற இயலாது
கண்ணடித்து தன் 
கடமையை புரிந்தது
என்றாலும்...
பெருங்காற்றும் சுழலும் 
ஒன்று சேர்ந்து 
வந்தாலும் நேர்வழியில் 
பாதை மாறா 
கட்டுமரம்...கரை வந்து 
சேர்ந்ததுவே...தனிமையில்...!
====================================
ஜெயஸ்ரீ ஷங்கர்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக